Dec 21, 2018

பன்னிரண்டு கால பூஜை


பன்னிரண்டு கால பூஜை

1. உஷக்காலம்

2. பிராதக்காலம்

3. காலமத்தியசந்தி

4. த்விதீயகாலசந்தி

5. மத்யசந்தி

6. மத்தியான்னம்

7. சாயங்காலம்

8. இராத்திரிசந்தி

9. அர்த்த ஜாமம்

10. பூதராத்திரி

11. காலராத்திரி

12. மகாநிசி

Nov 8, 2018

பிரத்யாஹாரம்

பிரத்யாஹாரம்

      
                  வழக்கமாக நாம் விஷயப் பொருள்களின் மீது நம் மனம் அனிச்சையாக ஒருமுகப்படும் நிலையில் இருக்கிறோம். விஷயப் பொருள்களில் உள்ள கவர்ச்சி நமது மனத்தை வலுக்கட்டாயமாக அதன்மீது ஒருமுகப் படச் செய்கிறது இதனால் நாம் அப்பொருள்களுக்கு அடிமைகள் ஆகிவிடுகிறோம். ஆனால் உண்மையில் நாம் நமது சங்கல்பத்திற்கோ, விருப்பத்திற்கோ ஏற்றவாறு மனத்தை விஷயங்களின் மீது செலுத்தவோ அல்லது அதிலிருந்து பிரித்துக் கொள்ளவோ முடிந்தவர்களாக இருக்க வேண்டும். விஷயங்கள் நம் மனத்தைக் கட்டாயப்படுத்திக் கவர்ந்து செல்லக் கூடாது, இந்தப் பயிற்சிதான் மனக் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான ஒரு படியாகும். இதனைக் கற்றுக் கொள்ளும் வரை நடைமுறை ரீதியாக மனக்கட்டுப் பாட்டில் நாம் எதையும் அடைய முடியாது.

       இதனை எப்படிச் செய்வது ? சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:

                   'நல்லவனாக இரு', 'நல்லவனாக இரு', 'நல்லவனாக இரு', என்று திரும்பத் திரும்ப உலகெங்கும் புகட்டப்படுவதைக் கேட்கிறோம். 'திருடாதே, பொய் சொல்லாதே' என்று அறிவுறுத்தப்படாத ஒரு குழந்தை கூட உலகின் எந்த நாட்டிலும் இருக்க முடியாது.  ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. வெறும் வாய்ப் பேச்சினால் அவனுக்குப் பயணில்லை . அவன் ஏன் திருடனாகக் கூடாது? திருடாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு நாம்  கற்றுக் கொடுப்பதில்லை.  'திருடாதே' என்று மட்டும் அவனிடம் வெறுமனே சொல்கிறோம். மனத்தை அடக்கியாளக் கற்றுக் கொடுக்கும்போதுதான் உண்மை யில் அவனுக்கு உதவுகிறோம்.

                     பொறிகள் எனப்படுகின்ற சில குறிப்பிட்ட மையங்களுடன் மனம் தன்னை இணைத்துக் கொள்ளும் போதுதான் அக மற்றும் புறச் செயல்கள் எல்லாமே நிகழ்கின்றன. மனம் உடன்பட்டாலும் சரி, உடன்படாவிட்டாலும் சரி, இந்த மையங்களுடன்  இணைவதற்காகவே இழுக்கப்படுகிறது. இதனால்தான் மக்கள் முட்டாள்தனமான காரியங்களைச் செய்து  விட்டுப் பின்னால் துன்பப்படுகிறார்கள். மனம் மட்டும் அவர்கள் வசம் இருந்திருந்தால், அவற்றை அவர்கள்  செய்திருக்கவே மாட்டார்கள். மனத்தை அடக்குவதால்  ஏற்படும் பலன் என்ன? அது பொறிகளோடு சேர்ந்து  கொள்ளாது இருக்கும் பொழுது எண்ணங்களும்  செயல்களும் இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும்  இதுவரை புரிகிறது. ஆனால், அது முடியக் கூடியதா? ஆம் கண்டிப்பாக முடியும்.

           பதஞ்சலி முனிவர்கூறியுள்ள பிரத்யாஹாரத்தைப் பயிற்சி செய்வதின்  மூலம் இதைச் செய்ய முடியும். பிரத்யாஹாரம் என்ன ? தத்தம் விஷயங்களை விட்டுவிட்டு புலன்கள்  அடங்கிய சித்தத்தின் உருவத்தை அடைவது போல  தோன்றுவது பிரத்யாஹாரம். 

"விஷயப் பொருள்களிலிருந்து மனத்தை விலக்கி  கொண்டால் புலன்களும் விஷயங்களிலிருந்து விலகிக்  கொள்கிறது. இது பிரத்யாஹாரம் எனப்படுகிறது."

                               
               விஷயப் பொருள்களையும் புலன்களையும் இணைக்கும் கருவி மனமேயாகும். மனத்தை விஷயப் பொருள்களிலிருந்து விலக்கிக் கொண்டால் புலன்களும் மனத்தைப் பின்பற்றி விஷயப் பொருள்களி லிருந்து விலகிக் கொள்கின்றன. மனத்தைக் கட்டுப் படுத்தி விட்டால் புலன்களும் தானாகவே கட்டுப் படுத்தப் படுகிறது. உதாரணமாகத் தேனீக்களை எடுத்துக் கொள்வோம்.  
                     
               " இராணித் தேனீ பறக்கும் வரை மற்ற தேனீக்களும் பறந்து செல்கிறது. இராணித் தேனீ பறப்பது நின்று விட்டால் மற்ற தேனீக்களும் நின்று விடுகின்றன. இதைப் போலவே மனம் அலை பாய்வது நின்று விட்டால் புலன்களும் அடங்கி விடுகின்றன. இதுவே பிரத்யாஹாரம் எனப்படுகிறது."

                பிரத்யாஹாரத்தின் முழு ரகசியமுமே, ஒவ்வொரு சாதாரண மனிதனும் வளர்த்துக் கொள்ளக் கூடிய மனவாற்றலில் உள்ளது. ஆனால் பலரிடம் இந்தச்த்தியானது வளர்ச்சியடையாமல் உள்ளது. பிரத்யாஹாரத்தில் ஒருவன் தேர்ச்சியடைந்து விட்டால் அவன் தன்னுடைய புலன்களையும், எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அடக்கியாளும் திறமை படைத்தவனாக ஆகி விடுகிறான். பிரத்யாஹாரத்தினால் ஒருவனுக்கு மனவாற்றலும், மனவாற்றலால் பிரத்யாஹாரமும் வளர்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.




பிராணாயாமம்

பிராணாயாமம்

                             நம் மனம் அமைதியின்றி இருக்கும் போது நம்முடைய சுவாசம் வேகமாக, ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். இந்த மனத்தை அமைதிப்படுத்த வேண்டுமானால் நம் கவாசத்தை முறைப்படுத்த வேண்டும். ஆழ்ந்த சுவாசிக்கின்ற முறையான பயிற்சி மனத்தை நிலை நிறுத்த உதவுகிறது.

                             பிராணாயாமம் (அதாவது சுவாசத்தை அடக்கிப் பயிற்சி செய்வதன் மூலம் பிராணனைக் கட்டுப்படுத்து தல்) பயில்வதன் மூலம் மனத்தை அடக்க முடியும். ஆனாலும் பிராணாயாமத்தை ஒரு குருவினிடமிருந்து நேரடியாகக் கற்று தூய்மையான சூழ்நிலையில் பயில்வது மிகவும் நல்லது. 

                பிரம்மச்சரியம் கடைப் பிடிக்காதவர்களும், நோய் வாய்ப்பட்ட இருதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் உடையவர்களும் பிராணாயாமம் செய்தல் கூடாது.



Nov 2, 2018

உண்மையான ஞானம்


உண்மையான ஞானம் 

                                மக்கள் தங்களுடைய நிலத்தை அளவுகோல் வைத்து அளந்து வரப்புப் போட்டு பிரித்து பங்கிட்டுக் கொள்கின்றனர். ஆனால் தலைக்கு மேல் எங்கும் பரந்திருக்கும். ஆகாயத்தை அதுபோல் பங்கிட்டுக்கொள்ள முடியாது. பகுக்க முடியாத அவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது.
                             அதேபோல் ஞானம் இல்லாதவனே தனது மதம்தான் உண்மையானது என்றும், உயர்ந்து என்றும் கூறுவான். ஆனால் உண்மையான ஞானம் அவன் மனதில் உதயமாகும்போது, இந்த மதச் சண்டைகளை எல்லாம் கடந்து அகண்ட சச்சிதானதப் பொருள் ஒன்று இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வான். 


Oct 30, 2018

எழு நிலைகள்


எழு நிலைகள் 

                    வேதங்களில் மனதின் ஏழு நிலைகளைப் பற்றிய வருணனைகள் கூறப்பட்டுள்ளன. இவை மனதின் வெவ்வேறு நிலைகளாகும். உலக விவகாரங்களில் மனம் ஆழ்ந்து  கிடக்கும்போது காமம், மூலம், நாபி எனும் கீழ் இடங்களில் ' மனம் வாழ்கிறது.

                    அப்போது மேல் நோக்கிய பார்வை மனதிற்கு உண்டாவதில்லை. இந்த நிலையில் உள்ளம் அதன் உயர்ந்த காட்சிகளை இழந்து விடுகிறது. 

                    காம உணர்ச்சிகளிலேயே அது சஞ்சரித்துக் கொண்- டிருக்கும். இதயம் மனதின் நான்காவது பூமி. மனம் இந்த நிலைக்கு வரும்போது முதன்முதலாக ஆத்மிக ஒளி ஏற்படு கிறது. ஜோதி காட்சியை ஒருகணம் பெறுகின்றது. ஒளிமய மான காட்சி கிடைக்கிறது.

                    மனிதன் ஈசுவர ஜோதியைக் கண்டு பேசும் சக்தி இழந்து ஆச்சரியத்தோடு 'ஆ! இது என்ன! இது என்ன!' என்று மட்டும் கூறுகின்றான். இதற்குப் பிறகு அவன் மனம் கீழ்நோக்கி, அதாவது... உலகப் பொருட்களையும் சம்சாரத்தையும் நோக்கிப் போவதில்லை.

                    மனதின் ஐந்தாவது நிலை தொண்டை (கண்டம்). மனம் தொண்டையை அடைந்ததும் அவித்யை, அஞ்ஞானம் எல்லாம் நீங்கிய நிலையை அடைகிறது.

                    கடவுளைப் பற்றிய பேச்சைத் தவிர, வேறு எந்தப் பேச் சையும் அவன் கேட்பதற்கோ, பேசுவதற்கோ விரும்பு வதில்லை . அப்படி வேறு யாராவது அவனிடம் பேசினால் அவன் அப்போதே அந்த இடத்தை விட்டு எழுந்து போய் விடுவான்.

                    மனதின் ஆறாவது நிலை, அதாவது... பூமி (கபாலம்) புருவ மத்தியாகும். மனம் அந்த நிலையை அடைந்து அங்கு தங்கும்போது இரவு பகலாக இறைவனின் உருவக் காட்சியைப் பார்க்கிறது.

                    அந்த நிலையிலும் 'நான்' என்பது, சிறிது இருக்கிறது. ஈடு இணையற்ற அந்த உருவத்தின் அழகைக் கண்டு சாதகன் பித்தனாகிறான். அந்த உருவத்தைத் தொடவும், அணைக் கவும் பெரிதும் விரும்புகிறான். ஆனால் அது முடிவதில்லை . உச்சந்தலை, அதாவது... தலையின் உச்சியில் மனதின் ஏழாவது பூமியுள்ளது. மனம் அந்த இடத்தை அடையும் போது சமாதி ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது.

                    நேராக பிரம்மத்தைக் காண்கிறான். ஆனால் அந்த நிலையில் அவன் உடல் அதிக நாள் நீடிப்பதில்லை . புற உலகை மறந்தவனாகிறான். எப்போதும் சுய நினைவு அற்ற நிலை அது. இதுவே பிரம்மஞானியின் நிலை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எல்லாக் காரியங்களும் நம்மை விட்டு விலகி விடுகின்றன. பூஜை, ஜபம் போன்ற பக்தி சம்பந்தமான காரியங்களும் விஷயப்பற்றுள்ள செயல்களும் விலகி விடுகின்றன . 




ழு நிலைள் 

Oct 23, 2018

ஆற்றலைப் பெறு


ஆற்றலைப் பெறு 


                  யாருடைய வாழ்கையில்தான் துன்பமும் துயரமும் இல்லை? அவை இருக்கவே செய்யும். அவருடைய திருநாமத்தைச் சொல். அவரைச் சரணடைந்து வாழ். அப்பொழுது அவர் ஆற்றலைத் தருவார். கஷ்டமோ பிரச்சனைகளோ ஏதும் அப்பொழுது உன்னை அலைக்கழிக்க முடியாது. 

-  அன்னை சாரதாதேவி 

கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே,
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.     
- கந்தரனுபூதி , 7


                      கெடு வழியிலே செல்லுகின்ற மனமே! நல் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுத்து மகிழ்ந்து, கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்து வருவாயாக. அப்படிச் செய்தால் நீண்ட காலமாகப் பிறவியிலே அகப்பட்டு நீ அனுபவித்து வருகின்ற துன்பங்கள் எல்லாம் சுட்டு எரிக்கப்படும். பிறவிக்கும், அதனால் வரும் துன்பத்திற்கும் காரணமான வினைகள் எல்லாம் உன்னை விட்டு நீங்கும். 

Oct 22, 2018

அங்கே இல்லை ; இங்கே

அங்கே இல்லை ; இங்கே 

                           இறைவன் அங்கே, அங்கே என்ற உணர்வு இருக்கும் வரையில் அஞ்ஞானம் உள்ளது ; இங்கே , இங்கே என்ற உணர்வு வந்தால் ஞானம் வந்துவிட்டது. 


- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


அங்கத்தை மண்ணுக்காக்கி 
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் 
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா 
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது 
இங்குற்றேன் என் கண்டாய்


-திருநாவுக்கரசர் தேவராம்    4.75.8

                                   நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.

மூன்று பதுமைகள்

மூன்று பதுமைகள் 


உப்பு, துணி, கல் போன்றவற்றால் செய்யப்பட்ட மூன்று வகை பதுமைகள் உள்ளன. அவைகளைத் தண்ணீரில் போட்டால், முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் நிறைய தண்ணீரைத் தன்ளுள் இழுத்துக்கொள்ளும். மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது.


இதில் கூறப்பட்ட,
முதலாவது பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு இணைந்து ஐக்கியமாகி விடும்.
இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் ஏராளமான தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக் கொள்ளும்.
மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது. பரமாத்மா விடம் சேர்ந்து விடும்.


முதலாவது பதுமை மனிதனைக் குறிக்கும். இரண்டாவது வகை பதுமை உண்மையான பக்தனைக் குறிக்கும். மூன்றாவது வகை பதுமை கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இருதயத்தை உடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.




Oct 16, 2018

தாமதிக்காமல் கூவி அழை


தாமதிக்காமல் கூவி அழை 

                உடல் இதோ இந்தக் கணம்  இருக்கிறது. அடுத்த கணம் இல்லை. மறைந்து விடுகிறது. எனவே தாமதிக்காமல் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும்.  

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


இவ்வுடம்பு நீங்கும் முனே 
எந்தாய்! கேள்! இன் அருளாம் 
அவ்வுடம்புக்குள்ளே 
அவதிரிக்கக் காண்பேனோ? 

- தாயுமானவர் பாடல் , 46.27

நிலையற்ற உறவுகள்


நிலையற்ற உறவுகள் 


               உலகின் உறவுகள் நிலையற்றவை. இன்று அவையே எல்லாம் போல் தோன்றும். நாளை மறைத்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 


தந்தை , தாய் , மகவு, மனை , வாழ்க்கை , யாக்கை
சங்கம் அனைத்தும் மௌனி அருள் தழைத்தபோதே 
இந்திர சலாம் கனவு கானல் நீராய் 
இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே!


- தாயுமானவர் பாடல் , 40.1  

ஞானத்தின் அடையாளம்


ஞானத்தின் அடையாளம் 

                     ஞானத்திற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன.          ஒன்று திடமான புத்தி. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துயரங்கள், இடையூறுகள், ஆபத்துகள் வந்தாலும் கொல்லன் பட்டறைக் கல் போல் அசையாதிருத்தல். இரண்டாவது அடையாளம் அண்மை , விடாமுயற்சி. 

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

யானேதும் பிறப்பஞ்சேன்; 
இறப்பதனுக் கென்கடவேன்.
வானேயும் பெறில்வேண்டேன் 
மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் 
சிவனேயெம் பெருமான்எம்
மானேயுன் அருள்பெறுநாள் 
என்றென்றே வருந்துவனே.

- திருவாசகம் , 5.12 

Oct 13, 2018

ஏற்க வேண்டியதை ஏற்க !

ஏற்க வேண்டியதை ஏற்க 

                      விலக்க வேண்டியவற்றை விலக்கி, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, இஷ்ட தெய்வத்திடம் ஒருமுகமான   ஈடுபாட்டுடன் மனத்தை நிலைநிறுத்தி , பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கும்.


-அன்னை ஸ்ரீசாரதாதேவி 



வந்த வரவை மறந்து உலகாய் வாழந்து கன்ம 
பந்தம் உற உன்னைப் படிப்பிக்கக் கற்றவன் யார்?
இந்த மதி ஏன் உனக்கு இருக்கு? என் மதி கேள்! என்னாலே 
சந்ததம் நெஞ்சே ! பரத்திற் சாரின் இன்பம் உண்டாமே. 

- தாயுமானவர் பாடல் , 29.7

இஷ்ட தெய்வம்,

இஷ்ட தெய்வம் 


                         'இதுதான் எனது இஷ்ட தெய்வம்'  என்று ஒரு தெய்வத்தின்
மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை கொண்டால் அவன் கடவுளை அடைவது உறுதி; அவன் கடவுளின் காட்சியைப் பெறுவான். 

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


வேதம் எத்தனை ? அத்தனை சிரத்தினும் விளங்கும் 
பாத ! நித்திய ! பரம்பர ! நிரந்தர ! பரம !
நாத ! தற்பர! சிற்பர வடிவமாய் நடிக்கும் 
நீத ! நிர்க்குண! நினையன்றி ஒன்றும் நான் நினையேன்.

- தாயுமானவர் பாடல் , 25.5

Oct 11, 2018

எல்லோருக்கும் தாய்





எல்லோருக்கும் தாய் 

                    ஜகதம்பாவான காளிதேவிதான் எல்லோருக்கும் தாய். நன்மை தீமை எல்லாம் ஆவளிடமிருந்தே தோன்றியுள்ளன, எல்லாவற்றையும் அவளே தோற்றுவித்திருக்கிறாள்.


- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




யாது மாகி நின்றய் - காளி! 
                   எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - காளி 
தெய்வ லீலை யன்றோ 

- பாரதியார் 



Oct 9, 2018

மாயையை வெட்டி ஏறி



மாயையை வெட்டி ஏறி 


                         மகளே ! இந்த உலகில் கணவனாகட்டும், மகனாகட்டும்,
உடம்பாகட்டும்,எதுவுமே உண்மையல்ல. இந்த மாயைகளின் பணத்தை வெட்ட முடியாவிட்டால் சம்சாரக் கடலைக் கடக்க இயலாது. இனி,'இந்த உடம்புதான் நாம்' என்று கருதிக்கொண்டிருக்கிறோமே அதுவும் மாயைதான்.கடைசியில் இந்த மாயையையும் வெட்டி எறிந்தேயாக வேண்டும்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




மாய விளக்கது நின்று மறைந்திடும்

தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்

சேய விளக்கினைத் தேடுகின்றேனை

-  திருமந்திரம் , 2367

Oct 2, 2018

இறைவனும் ஐசுவரியமும்

இறைவனும் ஐசுவரியமும் 

   

          இறைவனும் அவனுடைய ஐசுவரியமும். ஐசுவரியம் ஓரிரு நாட்களுக்குத்தான். இறைவனே  உண்மை. வித்தைக்காரனும் அவனுடைய ஜால வித்தையும் ,ஜால வித்தையைப் பார்த்து மக்கள் பரிமத்து நிற்கின்றனர்; ஆனால் அத்தனையும் பொய், வித்தைக்காரன்தான் உண்மை.பணக்காரனும் அவனுடைய தோட்டமும். தோட்டத்தை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். சொந்தக்காரனைத் தேட வேண்டும்.  

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே

-பட்டினத்தார் பாடல் ,317

May 12, 2018



தினம் ஒரு தியானம்