Oct 22, 2018

அங்கே இல்லை ; இங்கே

அங்கே இல்லை ; இங்கே 

                           இறைவன் அங்கே, அங்கே என்ற உணர்வு இருக்கும் வரையில் அஞ்ஞானம் உள்ளது ; இங்கே , இங்கே என்ற உணர்வு வந்தால் ஞானம் வந்துவிட்டது. 


- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


அங்கத்தை மண்ணுக்காக்கி 
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் 
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா 
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது 
இங்குற்றேன் என் கண்டாய்


-திருநாவுக்கரசர் தேவராம்    4.75.8

                                   நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.

No comments:

Post a Comment