Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

May 23, 2020

Universalism

Universalism

             From the high spiritual flights of the Vedanta philosophy, of which the latest discoveries of science seem like echoes, to the low ideas of idolatry with its multifarious mythology, the agnosticism of the Buddhists, and the atheism of the Jains, each and all have a place in the Hindu's religion.

             To the Hindu, then, the whole world of religions is only a travelling, a coming up, of different men and women, through various conditions and circumstances, to the same goal. Every religion is only evolving a God out of the material man, and the same God is the inspirer of all of them. Why, then, are there so many contradictions? They are only apparent, says the Hindu. The contradictions come from the same truth adapting itself to the varying circumstances of different natures.

             It is the same light coming through glasses of different colours. And these little variations are necessary for purposes of adaptation. But in the heart of everything the same truth reigns. The Lord has declared to the Hindu in His incarnation as Krishna, "I am in every religion as the thread through a string of pearls. Wherever thou seest extraordinary holiness and extraordinary power raising and purifying humanity, know thou that I am there." And what has been the result? I challenge the world to find, throughout the whole system of Sanskrit philosophy, any such expression as that the Hindu alone will be saved and not others. Says Vyasa, "We find perfect men even beyond the pale of our caste and creed." One thing more. How, then, can the Hindu, whose whole fabric of thought centres in God, believe in Buddhism which is agnostic, or in Jainism which is atheistic?

             The Buddhists or the Jains do not depend upon God; but the whole force of their religion is directed to the great central truth in every religion, to evolve a God out of man. They have not seen the Father, but they have seen the Son. And he that hath seen the Son hath seen the Father also

ॐ; ESSENTIALS OF HINDUISM ॐ;

Mar 25, 2020

உபதேச மொழிகள்


உபதேச மொழிகளில் சில 

              1. உங்கள் சாதனைகளைப் பற்றி நீங்கள் எல்லோரிடமும் கூறக் கூடாது. 
                     2. புறத்தில் ஒன்றுமில்லை; எல்லாம் அகத்திலேயே உள்ளது. அகத்தின் இசைக்கு முன்னர் புற இசைகள் எம்மாத்திரம்! ஆஹா அதன் இனிமை! பஞ்சவடியில் பாடிக் கொண்டுருக்கும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னுள்ளிருந்தே வீணையின் இனிய நாதத்தைக் கேட்டார்.
                     3. இறைவனை எங்கும் நிறைந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் தியானிக்க வேண்டும். இதற்கு இமயமலையையோ, பரந்த கடலையோ வானத்தையோ ஒருவன் பார்த்து, மனத்தில் நினைக்க வேண்டும்.
                     4. அகாயத்தில் நடப்பது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதை போன்றதே 'நூல்களைப் படிப்பதால் காமத்தை வென்றிடுவேன்; மனத்தை அடக்கி விடுவேன்' என்பதும். 
                      5. இறைவனிடம் பயம் ஏற்பட்டாலன்றி நல்லொழுக்கம் உண்டாகாது. அதாவது இறைவன், மறுபிறவி இவற்றில் நம்பிக்கை வேண்டும்.
                       6. கங்கை நீர் எல்லா நீரிலும் புனிதமானது. அது ஆசைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி இஷ்டதெய்வத்தை அறிய உதவி செய்கிறது. 'கங்கை நீர், பூரி ஜகநாதரின் மஹா பிரஸாதம், பிருந்தாவனத்தின் புனித மண் - இவை பிரம்மமே ஆகும்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளார். 
                       7. குண்டலினி சக்தி  கீழ் நோக்கிச் சென்றால் ஒருவனின் மனமும் கீழான விஷ்யங்களையே அதாவது சிற்றின்ப நாட்டத்தையே கொள்கிறது.
                        8. மனிதனிடம் சத்துவ குணம் ஓங்கும்போது, இறைக் காட்சிக்காக அவன் ஏங்குகிறான்; இறைவனது புகழைப் பாடுவதிலும் அவனைத் தியானிப்பதிலுமே இன்பம் காண்கிறான். 
                        9. சிராத்தம் முதலிய சடங்குகளிலுள்ள உணவை உண்ணக்கூடாது;அது சாதகனுக்குத் தீங்கு விளைவிக்கும். 

Oct 22, 2018

அங்கே இல்லை ; இங்கே

அங்கே இல்லை ; இங்கே 

                           இறைவன் அங்கே, அங்கே என்ற உணர்வு இருக்கும் வரையில் அஞ்ஞானம் உள்ளது ; இங்கே , இங்கே என்ற உணர்வு வந்தால் ஞானம் வந்துவிட்டது. 


- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


அங்கத்தை மண்ணுக்காக்கி 
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் 
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா 
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது 
இங்குற்றேன் என் கண்டாய்


-திருநாவுக்கரசர் தேவராம்    4.75.8

                                   நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.

Oct 13, 2018

இஷ்ட தெய்வம்,

இஷ்ட தெய்வம் 


                         'இதுதான் எனது இஷ்ட தெய்வம்'  என்று ஒரு தெய்வத்தின்
மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை கொண்டால் அவன் கடவுளை அடைவது உறுதி; அவன் கடவுளின் காட்சியைப் பெறுவான். 

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


வேதம் எத்தனை ? அத்தனை சிரத்தினும் விளங்கும் 
பாத ! நித்திய ! பரம்பர ! நிரந்தர ! பரம !
நாத ! தற்பர! சிற்பர வடிவமாய் நடிக்கும் 
நீத ! நிர்க்குண! நினையன்றி ஒன்றும் நான் நினையேன்.

- தாயுமானவர் பாடல் , 25.5

Oct 2, 2018

இறைவனும் ஐசுவரியமும்

இறைவனும் ஐசுவரியமும் 

   

          இறைவனும் அவனுடைய ஐசுவரியமும். ஐசுவரியம் ஓரிரு நாட்களுக்குத்தான். இறைவனே  உண்மை. வித்தைக்காரனும் அவனுடைய ஜால வித்தையும் ,ஜால வித்தையைப் பார்த்து மக்கள் பரிமத்து நிற்கின்றனர்; ஆனால் அத்தனையும் பொய், வித்தைக்காரன்தான் உண்மை.பணக்காரனும் அவனுடைய தோட்டமும். தோட்டத்தை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். சொந்தக்காரனைத் தேட வேண்டும்.  

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே

-பட்டினத்தார் பாடல் ,317

Mar 4, 2016

எல்லாம் ஒருவரே

எல்லாம் ஒருவரே 

                                    சிவன் , காளி , ஹரி எல்லோரும் ஒருவரின் பல்வேறு வடிவங்கள், எல்லாவற்றையும் ஒன்றென்று அறிபவன் பேறு பெற்றவன். புரத்திலே சிவன்,அகத்திலே காளி , வாயிலே ஹரி நாமம். 
                                                                                                                 
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்  


ஒன்றாகி அனைத்துயிர்க்கும்
உயிராகி எப்பொருளும்
அன்றாகி அவை அனைத்தும்
ஆனாளைப் பாடுவனே.
- குமரகுருபரர்]

இறைவன்

இறைவன்

                            இறைவனுக்கு அருவமும் உண்மை , அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. அனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதை பிடித்துக்கொள் .

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.