May 7, 2020

மூடநம்பிக்கை - 2

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 2

            துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்பொழுது நமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை , இரும்பை ஒத்த தசைகள். பலவீனப்படுத்துகின்ற வளவகொளகொள கருத்துக்கள் எதுயும் நமக்குத் தேவையில்லை..... மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை.
*              *              *
            மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது.
*              *              *
            மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள்; சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள்.
*              *              *
            எதாவது ஒன்று உங்கள் உடலை, அறிவை , ஆன்மிக உணர்வைப் பலவீனமாக்குமானால் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. இந்த ரகசிய வித்தைகளுள் எதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். அனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன.
*              *              *
            ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் எதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கிவிட வேண்டும். வலிமை வாழ்வில் சிறந்த வழிகாட்டி.
*              *              *
            வாழக்கை முழுவதுமான எனது பனியின் அனுபவத்தில் மனப்பூர்வமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்;ரகசிய வித்தைகள் (Occultism) எப்போதும் மனிதர்களுக்குக் கேடு விளைவிப்பவையாக, அவர்களைப் பலவீனர்களாகக்குவதாகவே உள்ளன. நமக்கு வேண்டியது வலிமை. வேறு எந்த இனத்தையும்விட இந்தியர்களான நமக்கு வலிமையையும் சிந்தனையில் உறுதியும் வேண்டும் எல்லாத்துறைகளிலும்  நமக்கு வேண்டிய அளவு நுண்ணிய விஷயங்கள் உள்ளன. எத்தனையோ நூற்றாண்டுகளாக நாம் இந்த ரகசியங்களுடன்தன வாழ்ந்து வருகிறோம். விளைவு? நமது அறிவு ஆன்மிகமும் சீரமைக்க முடியாத அளவுக்குக் கெட்டுவிட்டன; நமது இனம் அறியாமையின் அடித்தளத்திற்கே பொய்விட்டது.
சுவாமி விவேகானந்தர் 

May 6, 2020

மூடநம்பிக்கை - 1

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 1
                  
            இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் எதாவது நல்லதை  உருவாக்க முடியும். ஆனால் மூடநம்பிக்கை மட்டும் நுழைத்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கிவிடுகிறது.

*              *              * 

            ஏமாற்றுக்காரர்கள், செப்படி வித்தைக்காறார்கள் இவர்களின் கைப்பாவையாக இருப்பதைவிட நம்பிக்கையற்றவராக இருந்து இறுந்துபோவது மேல். பயன்படுத்துவத்துவதற்காகத் தான் பகுத்தறிவு உங்களிடம் உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தியதாக உலகிற்கு நிரூபியுங்கள்.
*              *              *

            தாம் அளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் கண்முடித்தனமாக நம்புகின்ற ஒருவனைவிட பகுத்தறிவைச் செயல் படுத்துகின்ற ஒருவனையே, அவன் நம்பாதவனாக இருந்தாலும், ஆண்டவன் மன்னிப்பார் என்று நான் நினைக்கிறேன்.
 *              *              *

            அவனுக்கு வலுவான மூளை வேண்டும், அசட்டுக் கருத்துக்கள் இல்லாத தெளிந்த மனம் வேண்டும், மனத்தை மூடியிருக்கும் மூட நம்பிக்கைகளை ஊடுருவி, தன்னுள் ஆழத்தில் உள்ள தனி உண்மையை அவன் அறிய வேண்டும். எல்லா நிறைவும் எல்லாச் சக்திகளும் ஏற்கனவே தன்னுள் உள்ளன. அவற்றைப் பிறர் தனக்குத் தரத் தேவையில்லை என்பதை அப்போது அவன் உணர்வான்.

 *              *              *

            ஒரு பழை நூலில் உள்ளது, முன்னோர்கள் காலத்திருந்து உங்கள் கைக்கு வந்தது, உங்கள் நண்பர்கள் நம்பச் சொல்கிறார்கள் என்தற்காகவெல்லாம் எதையும் நம்பாதீர்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள், நீங்களே உண்மையைத் தேடுங்கள், நீங்களே உணருங்கள்... மூளை  பலம் அற்றவர்களும், உறுதி இல்லாதவர்களும் ,தைரியம் அற்றவர்களும் உண்மையைக் காண முடியாது.  
சுவாமி விவேகானந்தர் 

உறவுகள் மேம்பட...

உறவுகள் மேம்பட...

  • நானே பெரியவன், நானே சிறந்தவன்  அகந்தையை (Ego) விடுங்கள்.    
  • அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள் (Loose Talk).
  • எந்த விஷயத்தையும் ப்ரிச்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise)
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் (Tolerance).
  • எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிரூக்காதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்,கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள்.(Flexibility)
  • மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் ,இனிய , இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy).
  • புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்துகொள்ளாதீர்கள்.
  • பிரச்சன்னைகள் ஏற்படும் பொது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.