Showing posts with label கண்மூடிப்பழக்கம். Show all posts
Showing posts with label கண்மூடிப்பழக்கம். Show all posts

May 8, 2020

மூடநம்பிக்கை - 3

மூடநம்பிக்கையைக் கைவிடு 

பாகம் - 3

            நமது மனத்தை பலவீனமாக்கி , மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை அசையுறச் செய்பவர்களாகவும் அற்புத்ச் செயல்களை நம்புபவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை.அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர , உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன. வலிமையே தேவையான ஒன்று.
*              *              *
   வீரம் மிக்க ஓரினத்தை உருவாக்க வேண்டுமானால் புத்துணர்ச்சியும் சிந்தனையில் ஊக்கமும் வேண்டும். உலகம் முழுவதற்குமே ஊக்கம் அளிப்பதற்குத் தேவையானதை விட அதிக ஆற்றல், உபநிடதங்களில் உள்ளன. ஆனால் அதைச் செயல்முறைப் படுத்தவேண்டும். 
*              *              *
            மனிதனில் உள்ள இயற்கை ஆற்றலின் வெளிப்பாடே மதம்.... அது எப்போதும் ஆற்றலின் வெளிப்பாடு.
*              *              *
           நான் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதுஇருப்பதைவிடத் தாழ்ந்தவர்களாக, பலவீனர்களாக நீங்கள் மாறுவதை என்னால் பார்க்க முடியாது.உங்களுக்காகவும் உண்மையின் பொருட்டும் நான் கடமைப்டட்டுள்ளேன்.ஆகவே தான் என் இனம் இழிநிலையை அடைவதை எதிர்த்து, 'போதும், போதும்' என்ற கதறுகிறேன்.பலவீப்படுத்துகின்ற இந்த ரகசிய வித்தைகளை விட்டுத் தள்ளுங்கள்.வலிமை உடையவர்களாக்குங்கள்... உபநிடத உண்மைகள் உங்கள் முன்னாள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளூங்கள். அப்போது இந்தியாவின் கதிமோட்சம் உறுதி.
*              *              *
          ஒளி வீசுகின்ற, வலிமை தருகின்ற, மேலான தத்துவமாகிய உங்கள் உபநிடதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த எல்லா ரகசிய வித்தைகளிலிருந்தும் எல்லாப் பலவீனப் பொருள்களிலிருந்தும் விலகிவிடுங்கள்.
*              *              *
     சேர்ந்துபோய் இருப்பது வேறு எதுவாகவும் இருக்கலாம்; அது ஒருபோதும் ஆன்மிகம் ஆகாது. பிரார்த்தனைமூலம் இறைவனை நெருங்கவதைவிட, உற்சாகத்தத்தாலும் புன்முறுவலாளும் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல முடியும்.
*              *              *
          மனவலிமை இழந்தவர்களால் எந்த வேலையும் செய்ய  முடியாது. பிறவிகள்தோறும் அவர்கள் அழுது அரற்றிக்கொண்டே வந்துவந்து போகிறார்கள்.
*              *              *
   தாழ்ந்தவனாம் , பலவீனனாம்! ஏன் இந்த சிந்தனை?நான் ஆதிபராசக்தியின் குழந்தை,எனக்கு என்ன நோய், என்ன பயம் ,என்ன குறைவு? 'தீனன்,பலவீனன்' என்ற எண்ணத்தை வேரோடு பிடிங்கி எறியுங்கள். 
*              *              *
              பலவீனம் , தளைகள் எல்லாமே கற்பனை .... பலவீனமடையாதீர்கள்! .... எழுந்து நில்லுங்கள்! அச்சம் வேண்டாம்!... எனக்குத் தெரிந்த மதமெல்லாம் அவ்வளவுதான்.

சுவாமி விவேகானந்தர் 

May 7, 2020

மூடநம்பிக்கை - 2

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 2

            துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்பொழுது நமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை , இரும்பை ஒத்த தசைகள். பலவீனப்படுத்துகின்ற வளவகொளகொள கருத்துக்கள் எதுயும் நமக்குத் தேவையில்லை..... மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை.
*              *              *
            மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது.
*              *              *
            மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள்; சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள்.
*              *              *
            எதாவது ஒன்று உங்கள் உடலை, அறிவை , ஆன்மிக உணர்வைப் பலவீனமாக்குமானால் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. இந்த ரகசிய வித்தைகளுள் எதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். அனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன.
*              *              *
            ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் எதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கிவிட வேண்டும். வலிமை வாழ்வில் சிறந்த வழிகாட்டி.
*              *              *
            வாழக்கை முழுவதுமான எனது பனியின் அனுபவத்தில் மனப்பூர்வமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்;ரகசிய வித்தைகள் (Occultism) எப்போதும் மனிதர்களுக்குக் கேடு விளைவிப்பவையாக, அவர்களைப் பலவீனர்களாகக்குவதாகவே உள்ளன. நமக்கு வேண்டியது வலிமை. வேறு எந்த இனத்தையும்விட இந்தியர்களான நமக்கு வலிமையையும் சிந்தனையில் உறுதியும் வேண்டும் எல்லாத்துறைகளிலும்  நமக்கு வேண்டிய அளவு நுண்ணிய விஷயங்கள் உள்ளன. எத்தனையோ நூற்றாண்டுகளாக நாம் இந்த ரகசியங்களுடன்தன வாழ்ந்து வருகிறோம். விளைவு? நமது அறிவு ஆன்மிகமும் சீரமைக்க முடியாத அளவுக்குக் கெட்டுவிட்டன; நமது இனம் அறியாமையின் அடித்தளத்திற்கே பொய்விட்டது.
சுவாமி விவேகானந்தர் 

May 6, 2020

மூடநம்பிக்கை - 1

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 1
                  
            இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் எதாவது நல்லதை  உருவாக்க முடியும். ஆனால் மூடநம்பிக்கை மட்டும் நுழைத்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கிவிடுகிறது.

*              *              * 

            ஏமாற்றுக்காரர்கள், செப்படி வித்தைக்காறார்கள் இவர்களின் கைப்பாவையாக இருப்பதைவிட நம்பிக்கையற்றவராக இருந்து இறுந்துபோவது மேல். பயன்படுத்துவத்துவதற்காகத் தான் பகுத்தறிவு உங்களிடம் உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தியதாக உலகிற்கு நிரூபியுங்கள்.
*              *              *

            தாம் அளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் கண்முடித்தனமாக நம்புகின்ற ஒருவனைவிட பகுத்தறிவைச் செயல் படுத்துகின்ற ஒருவனையே, அவன் நம்பாதவனாக இருந்தாலும், ஆண்டவன் மன்னிப்பார் என்று நான் நினைக்கிறேன்.
 *              *              *

            அவனுக்கு வலுவான மூளை வேண்டும், அசட்டுக் கருத்துக்கள் இல்லாத தெளிந்த மனம் வேண்டும், மனத்தை மூடியிருக்கும் மூட நம்பிக்கைகளை ஊடுருவி, தன்னுள் ஆழத்தில் உள்ள தனி உண்மையை அவன் அறிய வேண்டும். எல்லா நிறைவும் எல்லாச் சக்திகளும் ஏற்கனவே தன்னுள் உள்ளன. அவற்றைப் பிறர் தனக்குத் தரத் தேவையில்லை என்பதை அப்போது அவன் உணர்வான்.

 *              *              *

            ஒரு பழை நூலில் உள்ளது, முன்னோர்கள் காலத்திருந்து உங்கள் கைக்கு வந்தது, உங்கள் நண்பர்கள் நம்பச் சொல்கிறார்கள் என்தற்காகவெல்லாம் எதையும் நம்பாதீர்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள், நீங்களே உண்மையைத் தேடுங்கள், நீங்களே உணருங்கள்... மூளை  பலம் அற்றவர்களும், உறுதி இல்லாதவர்களும் ,தைரியம் அற்றவர்களும் உண்மையைக் காண முடியாது.  
சுவாமி விவேகானந்தர்