Oct 22, 2018

மூன்று பதுமைகள்

மூன்று பதுமைகள் 


உப்பு, துணி, கல் போன்றவற்றால் செய்யப்பட்ட மூன்று வகை பதுமைகள் உள்ளன. அவைகளைத் தண்ணீரில் போட்டால், முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் நிறைய தண்ணீரைத் தன்ளுள் இழுத்துக்கொள்ளும். மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது.


இதில் கூறப்பட்ட,
முதலாவது பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு இணைந்து ஐக்கியமாகி விடும்.
இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் ஏராளமான தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக் கொள்ளும்.
மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது. பரமாத்மா விடம் சேர்ந்து விடும்.


முதலாவது பதுமை மனிதனைக் குறிக்கும். இரண்டாவது வகை பதுமை உண்மையான பக்தனைக் குறிக்கும். மூன்றாவது வகை பதுமை கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இருதயத்தை உடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.




Oct 16, 2018

தாமதிக்காமல் கூவி அழை


தாமதிக்காமல் கூவி அழை 

                உடல் இதோ இந்தக் கணம்  இருக்கிறது. அடுத்த கணம் இல்லை. மறைந்து விடுகிறது. எனவே தாமதிக்காமல் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும்.  

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


இவ்வுடம்பு நீங்கும் முனே 
எந்தாய்! கேள்! இன் அருளாம் 
அவ்வுடம்புக்குள்ளே 
அவதிரிக்கக் காண்பேனோ? 

- தாயுமானவர் பாடல் , 46.27

நிலையற்ற உறவுகள்


நிலையற்ற உறவுகள் 


               உலகின் உறவுகள் நிலையற்றவை. இன்று அவையே எல்லாம் போல் தோன்றும். நாளை மறைத்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 


தந்தை , தாய் , மகவு, மனை , வாழ்க்கை , யாக்கை
சங்கம் அனைத்தும் மௌனி அருள் தழைத்தபோதே 
இந்திர சலாம் கனவு கானல் நீராய் 
இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே!


- தாயுமானவர் பாடல் , 40.1