Oct 30, 2018

எழு நிலைகள்


எழு நிலைகள் 

                    வேதங்களில் மனதின் ஏழு நிலைகளைப் பற்றிய வருணனைகள் கூறப்பட்டுள்ளன. இவை மனதின் வெவ்வேறு நிலைகளாகும். உலக விவகாரங்களில் மனம் ஆழ்ந்து  கிடக்கும்போது காமம், மூலம், நாபி எனும் கீழ் இடங்களில் ' மனம் வாழ்கிறது.

                    அப்போது மேல் நோக்கிய பார்வை மனதிற்கு உண்டாவதில்லை. இந்த நிலையில் உள்ளம் அதன் உயர்ந்த காட்சிகளை இழந்து விடுகிறது. 

                    காம உணர்ச்சிகளிலேயே அது சஞ்சரித்துக் கொண்- டிருக்கும். இதயம் மனதின் நான்காவது பூமி. மனம் இந்த நிலைக்கு வரும்போது முதன்முதலாக ஆத்மிக ஒளி ஏற்படு கிறது. ஜோதி காட்சியை ஒருகணம் பெறுகின்றது. ஒளிமய மான காட்சி கிடைக்கிறது.

                    மனிதன் ஈசுவர ஜோதியைக் கண்டு பேசும் சக்தி இழந்து ஆச்சரியத்தோடு 'ஆ! இது என்ன! இது என்ன!' என்று மட்டும் கூறுகின்றான். இதற்குப் பிறகு அவன் மனம் கீழ்நோக்கி, அதாவது... உலகப் பொருட்களையும் சம்சாரத்தையும் நோக்கிப் போவதில்லை.

                    மனதின் ஐந்தாவது நிலை தொண்டை (கண்டம்). மனம் தொண்டையை அடைந்ததும் அவித்யை, அஞ்ஞானம் எல்லாம் நீங்கிய நிலையை அடைகிறது.

                    கடவுளைப் பற்றிய பேச்சைத் தவிர, வேறு எந்தப் பேச் சையும் அவன் கேட்பதற்கோ, பேசுவதற்கோ விரும்பு வதில்லை . அப்படி வேறு யாராவது அவனிடம் பேசினால் அவன் அப்போதே அந்த இடத்தை விட்டு எழுந்து போய் விடுவான்.

                    மனதின் ஆறாவது நிலை, அதாவது... பூமி (கபாலம்) புருவ மத்தியாகும். மனம் அந்த நிலையை அடைந்து அங்கு தங்கும்போது இரவு பகலாக இறைவனின் உருவக் காட்சியைப் பார்க்கிறது.

                    அந்த நிலையிலும் 'நான்' என்பது, சிறிது இருக்கிறது. ஈடு இணையற்ற அந்த உருவத்தின் அழகைக் கண்டு சாதகன் பித்தனாகிறான். அந்த உருவத்தைத் தொடவும், அணைக் கவும் பெரிதும் விரும்புகிறான். ஆனால் அது முடிவதில்லை . உச்சந்தலை, அதாவது... தலையின் உச்சியில் மனதின் ஏழாவது பூமியுள்ளது. மனம் அந்த இடத்தை அடையும் போது சமாதி ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது.

                    நேராக பிரம்மத்தைக் காண்கிறான். ஆனால் அந்த நிலையில் அவன் உடல் அதிக நாள் நீடிப்பதில்லை . புற உலகை மறந்தவனாகிறான். எப்போதும் சுய நினைவு அற்ற நிலை அது. இதுவே பிரம்மஞானியின் நிலை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எல்லாக் காரியங்களும் நம்மை விட்டு விலகி விடுகின்றன. பூஜை, ஜபம் போன்ற பக்தி சம்பந்தமான காரியங்களும் விஷயப்பற்றுள்ள செயல்களும் விலகி விடுகின்றன . 




ழு நிலைள் 

Oct 23, 2018

ஆற்றலைப் பெறு


ஆற்றலைப் பெறு 


                  யாருடைய வாழ்கையில்தான் துன்பமும் துயரமும் இல்லை? அவை இருக்கவே செய்யும். அவருடைய திருநாமத்தைச் சொல். அவரைச் சரணடைந்து வாழ். அப்பொழுது அவர் ஆற்றலைத் தருவார். கஷ்டமோ பிரச்சனைகளோ ஏதும் அப்பொழுது உன்னை அலைக்கழிக்க முடியாது. 

-  அன்னை சாரதாதேவி 

கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே,
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.     
- கந்தரனுபூதி , 7


                      கெடு வழியிலே செல்லுகின்ற மனமே! நல் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுத்து மகிழ்ந்து, கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்து வருவாயாக. அப்படிச் செய்தால் நீண்ட காலமாகப் பிறவியிலே அகப்பட்டு நீ அனுபவித்து வருகின்ற துன்பங்கள் எல்லாம் சுட்டு எரிக்கப்படும். பிறவிக்கும், அதனால் வரும் துன்பத்திற்கும் காரணமான வினைகள் எல்லாம் உன்னை விட்டு நீங்கும். 

Oct 22, 2018

அங்கே இல்லை ; இங்கே

அங்கே இல்லை ; இங்கே 

                           இறைவன் அங்கே, அங்கே என்ற உணர்வு இருக்கும் வரையில் அஞ்ஞானம் உள்ளது ; இங்கே , இங்கே என்ற உணர்வு வந்தால் ஞானம் வந்துவிட்டது. 


- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


அங்கத்தை மண்ணுக்காக்கி 
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் 
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா 
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது 
இங்குற்றேன் என் கண்டாய்


-திருநாவுக்கரசர் தேவராம்    4.75.8

                                   நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.